Saturday, April 26, 2008

கனவு....காதல்....கொஞ்சம் கடமை - 10

10


வி.பி.சிங். கொடுத்த விலை!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், தமிழ்நாட்டில்தான் முதல் முதலாக 8.33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிறகுதான் இந்திய அளவில் அது நடைமுறைக்கு வந்தது.

வெள்ளையர்கள் ஆண்ட காலத்திலேயே தொழிலாளர் அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர், 1942ஆம் ஆண்டில், இந்தியாவெங்கும் உள்ள பட்டியல் சாதியினருக்கு 12.5 சதவிகித இடஒதுக்கீடு, அரசுப் பணிகளில் அளிக்கப்பட வேண்டும் என்று கோரினார். ஏறத்தாழ ஓர் ஆண்டுக்குப் பிறகு, 11.08.43 அன்று, 8.33 சதவிகித இடஒதுக்கீடு குறித்த ஆணை வெளியாகியது. ஆதலால், பட்டியல் சாதியினர் இடஒதுக்கீடு பெற்றுத் தந்த பெருமை அம்பேத்கரையே சேரும்.

இதற்கிடையே, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை சீக்கியர்கள், பார்சிக்கள், ஆங்கிலோ இந்தியர்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் முன் வைத்தனர். 1931ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி, 32 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகையில் 8 கோடிப் பேர் இஸ்லாமியராக இருந்தனர். (அது பாகிஸ்தானையும் உள்ளடக்கிய இந்தியா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்). எனவே, மத்திய அரசின் எல்லா வேலைகளிலும், இஸ்லாமியர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடும், சீக்கியர், பார்சி, கிறித்துவர், ஆங்கிலோ இந்தியர் ஆகிய நால்வருக்குமாகச் சேர்த்து 8.33 சதவிகித இடஒதுக்கீடும் வழங்கும் ஆணை 1933 இறுதியில் வெளியிடப்பட்டது.

அப்போது பொப்பிலி அரசர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அவருடைய ஆதரவோடு, 'சென்னைத் தலைமாகாணப் பார்ப்பனர் அல்லாதோருக்குச் சிறப்பு இடஒதுக்கீடு' (நல்ங்ஸ்ரீண்ஹப் தங்ள்ங்ழ்ஸ்ஹற்ண்ர்ய் ச்ர்ழ் ஙஹக்ழ்ஹள் டழ்ங்ள்ண்க்ங்ய்ஸ்ரீஹ் சர்ய் இழ்ஹட்ம்ண்ய்ள்) என்னும் கோரிக்கையை எடுத்துக்கொண்டு, சர்.ஏ.இராமசாமி முதலியார் டெல்லி சென்றார். அங்குள்ள அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து, தன் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினார். அவர் வாதத்தில் உள்ள நியாயத்தை அவர்களும் ஏற்றனர்.

ஆனால், டெல்லியிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அதுபோன்ற ஒதுக்கீடு, ஆதி திராவிட மக்களின் நலனைப் பாதிக்கும் என்று மறுத்துக் குறிப்பு எழுதினர். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழும் கதையை இராமசாமி முதலியார் மீண்டும் அனைவருக்கம் விளக்கினார். அதன் பயனாக, 1935 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி, அது நடைமுறைக்கு வந்தது. நீதிக்கட்யினரின் முயற்சி இல்லையெனில், அன்றைக்கு அது நடந்திருக்காது.

ஆனால் அனைத்து இடஒதுக்கீடுகளும், இந்தியா விடுதலை பெற்ற பிறகு மறுக்கப்பட்டுவிட்டன. 1947 செப்டம்பர் மாதம் 'இடஒதுக்கீட்டு ரத்து ஆணை' வெளியானது. அதன்பின் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, பட்டியல் சாதியினருக்கு மட்டும் மத்திய அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கு எவ்வித இடஒதுக்கீடும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

பட்டியலின மக்களுக்கு, நாடாளுமன்றத்தில், ஆறில் ஒரு பங்கு இடத்தை ஒதுக்க, சட்ட விதி 330 வகை செய்துள்ளது. ஆனால் விதி 332இன் படி, பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே இத்தகைய ஒதுக்கீடு செல்லும் என்ற நிலை உள்ளது. எனவே, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இச்சட்ட விதி புதுப்பிக்கப்படுகின்றது.

1950ஆம் ஆண்டு, கல்வித்துறையில், பிற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஒரு பார்ப்பனர் வழக்குத் தொடர்ந்தார். அதே ஆண்டு ஜுன் மாதத்தில், அவ்வழக்கில். விதி 15(1) இன் படி இடஒதுக்கீடு செல்லாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அடுத்த மாதமே (1950 ஜுலை), தில்லி உச்சநீதிமன்றம் அத்தீர்ப்பை உறுதி செய்தது.

அதன் எதிர்வினையாகத் தமிழகமெங்கும் எதிர்ப்புக் கிளம்பியது. 03.12.1950 அன்று, திருச்சியில் நடைபெற்ற பெரிய மாநாடு ஒன்றில், தில்லி அமைச்சர்களுக்குக் கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தார்.

தமிழகத்தின் கொந்தளிப்பு, தில்லியில் எதிரொலித்தது. அதன் விளைவாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் 1951 மே மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டது. 15(4), 16(4) என்னும் இரு புதிய சட்டப் பிரிவுகள் புதிதாய்ச் சேர்க்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு ஆகினவற்றில் இடஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கப்பட்டது.

எனினும், 1978 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் வட மாநிலங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒரு விழுக்காடு இடம்கூட ஒதுக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். பீகார் மாநில முதல்வராகக் கர்ப்பூரி தாகூர் வந்த பிறகே, இடஒதுக்கீடு பற்றி அம்மக்கள் அறியத் தொடங்கினர். 1978 நவம்பர் முதல், வட மாநிலங்களிலும் மெல்ல மெல்ல இடஒதுக்கீடு நடைமுறை பரவத் தொடங்கியது.

எனினும், மத்திய அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது இல்லவே இல்லை என்னும் நிலைதான் நீடித்தது. அதனால், மத்திய அரசின் கீழ் இருந்த அஞ்சலகத்துறை, தொடர்வண்டித் துறை, தொலைத் தொடர்புத் துறை, ஊடகவியல்துறை, உயிர்காப்பீட்டுத் துறை எனப் பல வலிமை வாய்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் மிக மிக குருகியே காணப்பட்டனர். இந்திய ஆட்சிப் பணியில் மட்டுமன்றி, மேற்கூறப்பெற்றுள்ள அனைத்துப் பணிகளிலும் ஒரு குறிப்பிட்ட சாதியினரே ஆதிக்கம் செலுத்தினர். ஆட்சி அவர்கள் கையில் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. ஆளும் கட்சியாக எந்தக் கட்சி வந்தபோதும், அதிகார வர்க்கம் மாறுவதில்லை என்பதால், அறிவிக்கப்படாத வருணாசிரம ஆட்சியே இன்று வரை நடைபெறுகிறது என்பது மிகையான கூற்றில்லை.

1953ஆம் ஆண்டு, மத்திய அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கலாமா என்பதைக் கண்டறிய நீதிபதி கலேல்கர் தலைமையில் ஒரு குழுவை, நேரு அரசாங்கம் அமைத்தது. காகா கலேல்கர் குழு என அறியப்படும் அக்குழு, 1955இல் தன் அறிக்கையைத் தலைமை அமைச்சர் நேருவிடம் ஒப்படைத்தது. ஆனால், அவ்வறிக்கையின் பரிந்துரை மீது எந்தவொரு நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.

எனவே, ஒரு குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் 'சுதந்திர இந்தியாவில்' சுதந்திரமாகத் தொடர்ந்தது. 1951ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 3.5 சதவீதமாக மட்டுமே இருந்த பார்ப்பனர்கள், நிதி, நீதி, நிர்வாகத் துறைகளில் 50 சதவீதத்திற்கும் மேலாக இருந்தனர். அக்கால கட்டத்தின் ஒரு சிறிய புள்ளி விவரத்தைப் பாருங்கள்.

இந்தியா முழுவதும் இருந்த அரசுச் செயலர், துணைச் செயலர் பதவிகள் 506. அவற்றுள் 351 பேர் பார்ப்பனர்கள். உச்ச நீதி மன்றத்தில், 16 நீதிபதிகளில் ஒன்பது பேர் பார்ப்பனர். 140 வெளிநாட்டுத் தூதுவர்களில் 68 பேர் பார்ப்பனர். இந்தியாவின் மொத்தம் 3500 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர். ஆளுநர்களாக இருந்த 27 பேரில் 13 பேர் பார்ப்பனர்.

இந்நிலைமை ஒரு நாட்டை எங்கு கொண்டு போய்ச் சேர்க்கும்? இது எவ்வளவு பெரிய சமூக அநீதி?

இந்தியாவெங்கும் இந்த முனுமுணுப்புகள் கேட்கத் தொடங்கின. பிறகு அவை முழுக்கங்களாக மாறத் தொடங்கின.

மக்கள் எழுச்சியின் காரணமாக, மொரார்ஜி தேசாய், தலைமை அமைச்சராக இருந்த போது, காகா கலேல்கர் குழுவைப் போல இன்னொரு குழு, அதே நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. அதுவே, 'மண்டல்குழு' என அறியப்படுகின்றது.

பீகாரைச் சேர்ந்த நீதிபதி பி.பி.மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழு, தன் பரிந்துரைகளை இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது ஒப்படைத்தது.

இந்திரா காந்தியோ அவரைத் தொடர்ந்து வந்த ராஜீவ் காந்தியோ அந்தப் பரிந்துரைகளை நாடாளுமன்றத்ல் முன் வைக்கவில்லை. வி.பி.சிங். இந்தியாவில் தலைமை அமைச்சர் ஆன பிறகுதான் அதற்கு உயிர் வந்தது. மண்டல் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை, 07.08.1990 அன்று, வி.பி.சிங் அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

அன்று இரவே, புதுதில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில், அன்றைய பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 'ரத யாத்திரை'த் திட்டம் வகுக்கப்பட்டது. சரியாக, மூன்றே மாதங்களில், பா.ஜ.க. தன் ஆதரவை விலக்கிக் கொள்ள நவம்பர் 7ஆம் தேதி, வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது.

''மண்டல குழு அறிக்கையின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்த முயன்றமைக்கு நான் கொடுக்க நேர்ந்த விலைதான் இந்த ஆட்சி இழப்பு'' என்றார் வி.பி.சிங்.

No comments:

Text Widget

Text Widget